×

பழுதான தண்ணீர் தொட்டி இடிப்பு

மல்லசமுத்திரம், மே 7: மல்லசமுத்திரம் ஒன்றியம், மேல்முகம் கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் தண்ணீர் வழங்கி வந்தனர். இந்த நீர்த்தேக்கத் தொட்டி பழுதடைந்து, துண்களில் காரை பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரியும்படி ஆபத்தான நிலையில் இருந்தது. இந்த தொட்டி அருகில் வீடுகளும், அவ்வழியாக பொதுமக்கள் செல்வதால், அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக தொட்டியை இடித்து அகற்றி விட்டு புதிதாக கட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், நேற்று பொக்லைன் மூலம் பழுதடைந்த நீர்த்தேக்கத் தொட்டியை பாதுகாப்பாக இடித்து அகற்றினர்.

The post பழுதான தண்ணீர் தொட்டி இடிப்பு appeared first on Dinakaran.

Tags : Mallasamutram ,Melmugam ,Dinakaran ,
× RELATED ₹2 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்