×

டூவீலர் திருடிய இருவர் கைது

ராசிபுரம், மே 6: ராசிபுரம் பகுதியில் டூவீலர் திருட்டு அதிகளவில் நடந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு ராசிபுரம் போலீசார், நேற்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக டூவீலரில் வந்த இருவரை பிடித்து, விசாரணை நடத்தினர். அவர்கள் சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள மாசிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜ்(28), ஓமலூர் பகுதியை குமார்(23) என்பதும், இருவரும் ராசிபுரம் பகுதியில் டூவீலர் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடமிருந்து, ஒரு டூவீலரை போலீசார் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டூவீலர் திருடிய இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Dinakaran ,
× RELATED நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே...