×

மழை வேண்டி சிறப்பு தொழுகை

 

சிவகங்கை,மே 6: சிவகங்கையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடத்தினர். மாவட்ட தலைவர் ரபீக் முகமது தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் முகமது இஸ்மாயில் முன்னிலை வகித்தார். சிவகங்கை பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் குளங்களிலும் தண்ணீர் இல்லாமல், வீடுகளில் உள்ள போர்வெல்களிலும் தண்ணீர் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

மேலும், கால்நடைக்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சிவகங்கை மிகவும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதனால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிவகங்கை கிளையில் மழை வேண்டி ஆண்கள் சட்டைகளை திருப்பிப் போட்டும், கைகளை நீட்டியவாறு சிறப்பு தொழுகை நடத்தினர்.

இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் கலந்து கொண்டு மழை வேண்டி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதில் மாவட்டத் துணைச் செயலாளர் சிஹாபுதீன், மாவட்ட மாணவரணி செயலாளர் வரிசை முகமது, சிவகங்கை கிளை தலைவர் ஷாஜகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதுபோல் திருப்புவனம் கிளையின் சார்பாக மழை வேண்டி தொழுகை நேற்று காலை திருப்புவனம் புதூரில் நடந்தது. இதில் ஏராளமான முஸ்லீம் மக்கள் மற்றும் பெண்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டனர்.

The post மழை வேண்டி சிறப்பு தொழுகை appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Tamil Nadu ,Tawheed Jamaat ,Rafiq Mohammed ,District Treasurer ,Mohammad Ismail ,Sivaganga ,
× RELATED ஓய்வூதியம் பெற இ-சேவை மையம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்