×

செஞ்சி அருகே வாலிபர் மர்ம சாவு

 

செஞ்சி, மே 6: செஞ்சி அருகே வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். செஞ்சி அடுத்த ஏதாநெமிலி கிராமத்தைச் சேர்ந்த காத்தவராயன் என்பவரது மகன் லோகநாதன் (30), இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் சென்னையில் வசித்து வருகின்றனர். இவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

கடந்த மூன்று நாட்களாக வீட்டின் கதவு திறக்காமல் இருந்து வந்துள்ள நிலையில் துர்நாற்றம் வீசுவதை அறிந்து அவரது வீட்டின் அருகே சென்ற பொதுமக்கள் உறவினர்களுக்கு தெரிவித்துள்ளனர். பின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மர்மமான முறையில் லோகநாதன் இறந்து கிடந்துள்ளார்.

இதையடுத்து செஞ்சி காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்த இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி செஞ்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். லோகநாதன் உடல்நிலை சரியில்லாமல் இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணத்தால் இறந்தாரா என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசியதால் இவர் மூன்று நாட்களுக்கு முன்பே இறந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

The post செஞ்சி அருகே வாலிபர் மர்ம சாவு appeared first on Dinakaran.

Tags : Senchi. ,Senchi ,Loganathan ,Kathavarayan ,Ethanemili ,
× RELATED செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் குவிந்த 10,000 நெல் மூட்டைகள்