×

கடைவீதிக்கு சென்ற மாணவி திடீர் மாயம்

நெல்லை, மே 5: நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி மாவடி மேற்குத் தெருவைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மனைவி செல்வராணி (40). அப்பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்துவந்த இவர்களது பேத்தி 16 வயது, கடந்த 3ம் தேதி இரவு 7.30 மணி அளவில் கடைவீதிக்கு சென்றபோது திடீரென மாயமானார். இதனால் பதறிய குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் மாயமான மாணவி குறித்த எந்த விவரமும் தெரியவரவில்லை. பின்னர் இதுகுறித்து அவரது பாட்டி செல்வராணி, சேரன்மகாதேவி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவுசெய்த இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகமது மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கடைவீதிக்கு சென்ற மாணவி திடீர் மாயம் appeared first on Dinakaran.

Tags : Nellai ,Shanmugavel ,Cheranmagadevi Mavadi West Street, Nellai district ,Selvarani ,
× RELATED நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த விவசாயி உயிரிழப்பு