×

சீராக வழங்க கோரிக்கை பொன்னமராவதியில் மே தின விழா கொண்டாட்டம்

பொன்னமராவதி, மே 3: பொன்னமராவதியில் மே தின விழா கொண்டாடப்பட்டது. அரசு போக்குவரத்து கழக பொன்னமராவதி பணிமனையில் சிஐடியூ கிளைச் செயலாளர் பாலமுருகன் தலைமையில் நிர்வாகிகள் சுப்பிரமணி, மணிவேல் மற்றும் சிஐடியூ மாவட்ட குழு உறுப்பினர் தீன் ஆகியோர் முன்னிலையில் ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் வட்டார தலைவர் சிவஞானம் செங்கொடியை ஏற்றி வைத்தார். மின்வாரிய அலுவலக வளாகத்தில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியூ) திருமயம் கோட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமையில் கோட்ட துணை தலைவர் ரவி, நிர்வாகிகள் பாரத், பெருமாள், ஆண்டி, முருகேசன், சேவகன், ஜெயக்குமார், ரஞ்சித்குமார், தேவராஜ், பழனியப்பன், மின்பாதை ஆய்வாளர் குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சிஐடியூ மாவட்ட குழு உறுப்பினர் தீன் செங்கொடியை ஏற்றி வைத்தார்.

The post சீராக வழங்க கோரிக்கை பொன்னமராவதியில் மே தின விழா கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : May Day Festival ,Ponnamaravati ,Subramani ,Manivel ,CITU District Committee ,Deen ,CITU ,Branch ,Balamurugan ,Government Transport Corporation ,Ponnamaravathi ,May Day ,Dinakaran ,
× RELATED பொன்னமராவதி அருகே மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்