புதுடெல்லி: போதை பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி கோரிய அமலாக்கத்துறைக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. டெல்லியில் கைப்பற்றப்பட்ட போதைபொருள் கடத்தல் வழக்கில் சென்னையை சேர்ந்த ஜாபர் சாதிக், முஜிபுர், முகேஷ், அசோக்குமார், சதானந்தம் ஆகிய 5 பேரும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக ஜாபர் சாதிக் உள்ளிட்டோரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், ‘திகார் சிறைக்கு சென்று ஜாபர் சாதிப் உள்பட 5 பேரிடமும் 3 நாட்கள் வாக்குமூலத்தை பதிவு செய்யவும், சிறைக்குள் லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களை எடுத்து செல்லவும் அனுமதிக்க வேண்டும்’ கோரப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று அனுமதி அளித்தது.
The post ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி: டெல்லி நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.