ஈரோடு, மே 1: தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பெண்களின் தாலி குறித்து பேசியதை கண்டித்து கையில் தாலியுடன் மகிளா காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் ஈரோடு மகிளா காங்கிரஸ் கட்சியினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மகிளா காங்கிரஸ் தலைவி தீபா தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம், துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பெண்களின் தாலி குறித்து பேசியதை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கையில் ‘மஞ்சள் கிழங்கு கொண்ட தாலியை’ ஏந்தியும் தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், மண்டல தலைவர்கள் ஜாபர் சாதிக், விஜயபாஸ்கர், சிறுபான்மை பிரிவு தலைவர் ஜூபைர் அகமது, துணை தலைவர் பாஷா, நிர்வாகிகள் கிருஷ்ணவேணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post பிரதமர் மோடியை கண்டித்து மகிளா காங்கிரசார் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.