- அமேதி
- ராபர்ட் வத்ரா
- ரிஷிகேஷ்
- புது தில்லி
- பிரியங்கா
- மத்திய அமைச்சர்
- ஸ்மார்ட் ஈரானி
- காங்கிரஸ்
- ஜனாதிபதி
- ராகுல் காந்தி
- உத்திரப்பிரதேசம்
புதுடெல்லி: அமேதி தொகுதியில் பிரியங்கா கணவர் ராபர்ட் வத்ரா போட்டியிடலாம் என்ற பேச்சு எழுந்து இருக்கும் நிலையில் அவர் ரிஷிகேஷில் வழிபாடு செய்தார். உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் 2019ல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி தோற்கடித்தார். இந்த தேர்தலில் மீண்டும் கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல் போட்டியிடுகிறார். ஆனால் அமேதி தொகுதி பற்றி எந்த தகவலும் இல்லை. அங்கு பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா போட்டியிடலாம் என்ற யூகங்கள் எழுந்துள்ளன. அவர் போட்டியிடுவதை வரவேற்று அங்கு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்த சூழ்நிலையில் ராபர்ட் வத்ரா திடீரென ரிஷிகேஷ் சென்றார். அங்கு பிரார்த்தனை செய்த பிறகு அவர் கூறும் போது,’ இங்கு வந்து வழிபட்டது எனக்கு சக்தியை அளித்துள்ளது, பிரச்சாரத்தின் போது ராகுல் மற்றும் பிரியங்கா காந்தியின் பாதுகாப்பிற்காக நான் பிரார்த்தனை செய்தேன். நாட்டில் அமைதியான சூழல் நிலவவும், சகோதரத்துவ உணர்வு நிலைத்திருக்கவும் பிரார்த்தனை செய்தேன். மதத்தையும் அரசியலையும் முற்றிலும் தனித்தனியாக வைத்திருங்கள்’ என்றார்.
The post அமேதியில் போட்டியா?.. ராபர்ட் வத்ரா ரிஷிகேஷில் வழிபாடு appeared first on Dinakaran.