- எடபாடி பழனிசாமி
- நீர்மோர் பந்தல்
- சேலம் சுரமங்கல
- சேலம்
- பொது செயலாளர்
- எடப்பாடி பழனிசாமி
- நீர்மோர் பாண்டலா
- சூரமங்கலம், சேலம் மாவட்டம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஈரோடு
- அயதபாடி பழனிசாமி
சேலம்: சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில் நீர்மோர் பந்தலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை காரணமாக கோடை வெப்பம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. சேலத்தை பொறுத்தவரை 108 டிகிரிக்கு மேல் கோடை வெப்பத்தின் தாக்கம் இருப்பதால் பிற்பகல் நேரத்தில் அனல் காற்று வீசுகிறது. இதன் காரணமாக திமுக சார்பில் கடந்த மாதத்தில் பல்வேறு இடங்களில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
இந்த நிலையில் சேலம் சூரமங்கலம் பகுதியில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலை அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். சேலம் ரயில் நிலையம் எதிரே இருக்கக்கூடிய பகுதியில் தான் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மக்களுக்கு தேவையான குடிநீர், நீர் மோர், பழங்கள், நுங்கு, இளநீர், குளிர்பானம் உள்ளிட்டவை கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
முதற்கட்டமாக அங்குள்ள பெண்களுக்கு நீர்மோர், தர்பூசணி உள்ளிட்ட பழங்களை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்துக்கொண்டனர். பொதுமக்கள் யாரும் வெயிலில் வெளியில் செல்ல வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கினார். அதுமட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் நீர் மோர் பந்தல் திறக்க வேண்டும் என கட்சியினருக்கும் அறிவுறுத்தியுள்ளார். அதிமுகவினர் திரண்டதால் சூரமங்கலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
The post சேலம் சூரமங்கலத்தில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார் எடப்பாடி பழனிசாமி; மோர், தர்பூசணி உள்ளிட்ட பழங்களை மக்களுக்கு வழங்கினார்..!! appeared first on Dinakaran.