- கெஜ்ரிவால்
- தில்லி
- புது தில்லி
- முதல்வர்
- சுனிதா கெஜ்ரிவால்
- மக்களவைத் தேர்தல்
- முதல் அமைச்சர்
- தீஹார் சிறை
- சுனிதா
புதுடெல்லி: மக்களவை தேர்தலையொட்டி டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் ரோட் ஷோ நடத்த உள்ளார். டெல்லி புதிய மதுபான கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட சுனிதா கெஜ்ரிவால் ரோட் ஷோ நடத்த உள்ளதாக ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. கிழக்கு டெல்லியில் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமாருக்கு ஆதரவாக கோண்டலியில் சுனிதா கெஜ்ரிவால் முதல் ரோட் ஷோ நடத்த உள்ளார். தொடர்ந்து மற்ற 3 தொகுதிகளிலும் ரோட் ஷோக்களை நடத்துவார். மேலும் குஜராத் ஆம் ஆத்மி நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள சுனிதா குஜராத், பஞ்சாப் ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்வார் என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
The post டெல்லியில் கெஜ்ரிவால் மனைவி சுனிதா ரோட் ஷோ appeared first on Dinakaran.