×

விஷ தேனீக்கள் அழிப்பு

கெங்கவல்லி, ஏப்.23: கெங்கவல்லி அருகே நடுவலூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது விவசாய தோட்டத்தில் உள்ள புளிய மரத்தில், விஷ தேனீக்கள் கூடுகட்டி இருந்தது. இந்நிலையில், நேற்று காலை திடீரென விஷ தேனீக்கள் தோட்டத்தில் பணிபுரியும் கூலித் தொழிலாளர்களை கொட்டியது. இதையடுத்து தொழிலாளர்கள் பயந்து வீட்டுக்குள் புகுந்து கதவை சாத்திக் கொண்டனர். அப்போது 10க்கும் மேற்பட்ட மாடுகளை தேனீக்கள் கொட்டியது. இது குறித்து அறிந்த பாலகிருஷ்ணன், உடனடியாக கெங்கவல்லி தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து நிலைய அலுவலர் (பொ) செல்லப்பாண்டியன் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீர் பீச்சியடித்து விஷ தேனீக்களை அழித்தனர். காயம் அடைந்தவர்கள் கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

The post விஷ தேனீக்கள் அழிப்பு appeared first on Dinakaran.

Tags : Kengavalli ,Balakrishnan ,Madhulur ,
× RELATED ஒரு கிலோ பாக்கு ₹900க்கு விற்பனை