- எதிர்ப்பு அலை
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- பாஜக
- சென்னை
- Mutharasan
- அரசுத்தலைவர்
- அதானி
- அம்பானி
- அலை
- கம்யூனிஸ்ட்
- பஜாவு
- தின மலர்
சென்னை: பாஜ தலைவர்கள் தரம் தாழ்ந்த பரப்புரைக்கு முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: பத்தாண்டு கால ஆட்சியில் மக்கள் விரோத கொள்கைகளை செயல்படுத்தி அதானி, அம்பானி குழுமங்கள் உப்பிப் பெருக்க உதவி செய்து வந்த பாஜ மக்களின் நலன் குறித்து பேசுவதற்கு ஏதும் இல்லாமல். எதிர்கட்சிகள் மீது அப்பட்டமான பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றது.
சோனியா மீது அவதூறு கூறி, இழிவு செய்வதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இந்தியா கூட்டணி வென்றால் நாட்டில் கலவரங்கள் அதிகரிக்கும் என உள்துறை அமைச்சர் பேசுவது மக்களையும், வாக்காளர்களையும் அச்சுறுத்தி, ஆதாயம் தேடும் மலிவான செயலாகும். பாஜ தலைவர்களின் பொறுப்பற்ற, தரம் தாழ்த்த பேச்சுகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post எதிர்ப்பு அலையால் மக்களை அச்சுறுத்துவதா? பாஜவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் appeared first on Dinakaran.