×

கொடைக்கானலில் மலர் செடிகளை கொண்டு வாக்காளர் விழிப்புணர்வு சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

கொடைக்கானல், ஏப். 14: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் சரவணன் தலைமை வகித்தார். குடிமை பொருள் தாசில்தார் சரவணவாசன், பிரையண்ட் பூங்கா மேலாளர் சிவபாலன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும், ஓட்டுக்கு தேவையில்லை நோட்டு என அனைவரும் உறுதிமொழி ஏற்று கொண்டதுடன், இதுபற்றி சுற்றுலா பயணிகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பூங்காவில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி மலர் செடிகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக விரலில் மை தடவியது போன்ற மலர் உருவ அமைப்பும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இது சுற்றுலா பயணிகளை ெவகுவாக கவர்ந்தது.

The post கொடைக்கானலில் மலர் செடிகளை கொண்டு வாக்காளர் விழிப்புணர்வு சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Bryant Park ,District Women Program ,Saravanan ,Civic Affairs ,Tahsildar Saravanavasan ,Bryant ,Park ,Manager ,Sivapalan ,
× RELATED கோடை கொண்டாட்டத்துக்கு பிரையண்ட்...