×

விருதுநகரில் காங். வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பிரசாரம்: காங். ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலை குறைக்கப்படும் என உறுதி..!!

விருதுநகர்: திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் விருதுநகரில் போட்டியிடும் மாணிக்கம் தாகூர் மதுரை திருமங்கலம் அருகே தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரங்கள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடக்கூடிய காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், இன்று திருமங்கலத்தில் உச்சபட்டி என்ற இடத்தில் தனது பிரச்சாரத்தை துவங்கினார். அச்சமயம், மாணிக்கம் தாகூருக்கு மலர் தூவி கிராம மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். பரப்புரையில் பேசிய மாணிக்கம் தாகூர், 100 நாள் வேலை திட்டத்தை பாஜக அரசு சீர்குலைத்துவிட்டது என்றார்.

கப்பலூரில் விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை காங்கிரஸ் ஆட்சி பெறுப்பேற்றவுடன் முற்றிலும் அகற்றுவோம் என உறுதி அளித்தார். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் கைதட்டி வரவேற்பு தெரிவித்தனர். தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த மகளிர் உரிமை தொகை குறித்தும் பரப்புரையில் பேசப்பட்டது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலை குறைக்கப்படும் எனவும் மாணிக்கம் தாகூர் உறுதி அளித்துள்ளார்.

The post விருதுநகரில் காங். வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பிரசாரம்: காங். ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலை குறைக்கப்படும் என உறுதி..!! appeared first on Dinakaran.

Tags : Kang ,Virudhunagar ,Manikam Tagore ,Congress ,Dimuka Alliance ,Madurai Thirumangalam ,Manikam ,
× RELATED விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர்...