×

திருப்பூர் அருகே அரசுபேருந்து மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

திருப்பூர்: வெள்ளக்கோவில் அருகே ஓலப்பாளையத்தில் அரசுபேருந்து மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ஒரு குடும்பத்தினர் தங்களது காரில் 60ஆம் கல்யாணத்திற்காக திருக்கடையூர் என்ற ஊருக்கு சென்று அந்த விழாவில் கலந்து கொண்டு அதன் பின் வீடு திரும்பி கொண்டிருந்தனர். காங்கயம் அருகே ஓலப்பாளையத்தில் அவர்கள் சென்ற காரின் மீது அரசு பேருந்து நேருக்கு நேர் மோதியதை அடுத்து பெரும் விபத்து ஏற்பட்டது.

விபத்தில் காரில் சென்ற இளவரசன் (26), சந்திரசேகரன் (60), சித்ரா(57), அறிவித்ரா(30), சாக்சி ஆகிய 5 பேரும் உயிரிழந்தார். விபத்தில் சசிதரன் என்பவர் படுகாயங்களுடன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விபத்து காரணமாக கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

The post திருப்பூர் அருகே அரசுபேருந்து மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Olappalayam ,Valakko ,Tiruppur district ,Kangeyam ,Thirukkadayur ,
× RELATED திருப்பூரில் இருந்து தேர்தலில்...