×

சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஆம்புலன்ஸ்

 

சேந்தமங்கலம், ஏப்.7: சேந்தமங்கலம் ஒன்றியம், கொண்டமநாயக்கன்பட்டி ஊராட்சி மருங்கம்பட்டியில், ஒருவர் இறந்தார். அவரை போலீசார் சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து, உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைத்தனர். அவர்கள் சடலத்தை ஊருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்வதற்காக, நாமக்கல்லில் இருந்து ஒரு தனியார் ஆம்புலன்ஸை வாடகைக்கு பேசி வரச் சொல்லி இருந்தனர். அதன்படி, டிரைவர் நாமக்கல்லில் இருந்து சேந்தமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

தத்தகிரி முருகன் கோவில் அருகே உள்ள சாலையோர பள்ளத்தில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் தலைகுப்புற கவிழ்ந்தது.  இதைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் ஓடி சென்று ஆம்புலன்சில் சிக்கிய டிரைவரை மீட்டு சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து, மாற்று ஆம்புலன்ஸ் மூலம், சடலத்தை உறவினர்கள் ஊருக்கு எடுத்துச் சென்றனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஆம்புலன்ஸ் appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Marungambatti, Kondamanayakanpatti Panchayat ,Senthamangalam Union ,Senthamangalam Government Hospital ,Namakall ,Dinakaran ,
× RELATED பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் பாஜ பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை