×

குட்கா விற்ற மூதாட்டி உட்பட 2 பேர் கைது

ஈரோடு, ஏப்.7:ஈரோடு மாவட்டம் சிவகிரி புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், சிவகிரி போலீசார் நேற்று அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, ஒரு கடையில் குட்கா மற்றும் புகையிலை விற்றதாக சிவகிரி பாரதி வீதியை சேர்ந்த நாட்ராயன் மனைவி பூவத்தாள் (70) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த குட்கா, புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதேபோல், கடம்பூர் இருட்டிபாளையத்தில் குட்கா, புகையிலை விற்றதாக மளிகை கடை உரிமையாளரான அதே பகுதியை சேர்ந்த ராஜா (42) என்பவரை கடம்பூர் போலீசார் கைது செய்து, புகையிலை, குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

The post குட்கா விற்ற மூதாட்டி உட்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Gutka ,Erode ,Sivagiri Pudu Bus Stand ,Erode district ,Sivagiri police ,
× RELATED குட்கா பதுக்கி விற்ற கடைக்காரர் கைது