×

உரிய ஆவணமின்றி கொண்டு சென்றதாக ஊராட்சி தலைவர் காரில் ரூ.1.91 லட்சம் பறிமுதல்

சென்னை: திருப்போரூர் ரவுண்டானா பகுதியில் நேற்று காலை, தேர்தல் பறக்கும் படை அலுவலர் கிருபாசங்கரி தலைமையில் அதிகாரிகள், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக சென்ற கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டதில், ரூ.1.91 லட்சம் இருந்தது. விசாரணையில், இந்த கார் இள்ளலூர் ஊராட்சி மன்ற தலைவர் தாண்டவமூர்த்தி என்பவருக்கு சொந்தமானது என்றும், காரை ஓட்டி வந்தவர் அவரது ஓட்டுநர் வசந்தகுமார் என்பதும் தொியவந்தது.

மாவட்ட உதவி தேர்தல் அலுவலர் வேலாயுதம், திருப்போரூர் வட்டாட்சியர் பூங்கொடி ஆகியோர் முன்னிலையில் அந்த பணம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, அங்கு வந்த தாண்டவமூர்த்தி தனக்கு உடல்நிலை சரி இல்லாததால் மருத்துவமனையில் இருந்து காலையில் டிஸ்சார்ஜ் ஆனதாகவும், மேல் சிகிச்சைக்காக பணம் தேவைப்பட்டதால் ஓட்டுநர் மூலம் எடுத்து வரச் சொன்னதாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாதததால் பணம் பறிமுதல் செய்யப்படுவதாக கூறி அதிகாரிகள் பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

 

The post உரிய ஆவணமின்றி கொண்டு சென்றதாக ஊராட்சி தலைவர் காரில் ரூ.1.91 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : panchayat ,CHENNAI ,Election ,Krupashankari ,Tirupporur Roundabout ,Illalur ,Dinakaran ,
× RELATED பிரானூர் ஊராட்சி பகுதியில் சீராக குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை