×

வனபத்ரகாளியம்மன் கோயில் காணிக்கை கையாடல் அறங்காவலர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு

மேட்டுப்பாளையம், ஏப்.5: மேட்டுப்பாளையம் அடுத்துள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வனபத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் செயல் அலுவலரும், உதவி ஆணையருமான கைலாசமூர்த்தி மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்றினை அளித்திருந்தார். அந்த புகார் மனுவில், ‘‘வனபத்ரகாளியம்மன் கோவில் பூசாரிகள் ரகுபதி, தண்டபாணி, விஷ்ணுகுமார், சரவணன் உள்ளிட்ட 4 பேரும் கோயிலுக்கு பக்தர்கள் செலுத்திய தட்டு காணிக்கைகளை கையாடல் செய்துள்ளனர்.

அதனை அறங்காவலர் வசந்தா சம்பத் கவனத்திற்கு கொண்டு சென்றபோது அவர் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் சம்பந்தப்பட்ட ஐவர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி மேட்டுப்பாளையம் போலீசார் வனபத்ரகாளியம்மன் பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத் உள்ளிட்ட 5 பேர் மீது நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post வனபத்ரகாளியம்மன் கோயில் காணிக்கை கையாடல் அறங்காவலர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Vanabhatrakaliyamman ,Mettupalayam ,Vanabhadrakaliamman Temple ,Thekambatti Bhavani river ,Kailasamurthy ,Vanabhadrakaliyamman ,Raghupathi ,Thandapani ,Vanabhadrakaliyamman temple ,
× RELATED கோடை சீசனை ஒட்டி உதகை –...