×

திண்டுக்கல் மாநகராட்சி ஆபீசில் தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

திண்டுக்கல், ஏப். 5: திண்டுக்கல் மாநகராட்சி வளாகத்தில் ஆணையர் அலுவலகம் முன்பு குப்பையை கொட்டி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கோடை காலத்தில் 1 மணி நேரம் பணி வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு தொல்லை கொடுக்கும் சுகாதார ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பழநி ரோட்டில் உள்ள குப்பை கிடங்கில் தரம் பிரிக்கும் பணியை மீண்டும் துவக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தகவலறிந்து வந்த ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

The post திண்டுக்கல் மாநகராட்சி ஆபீசில் தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Dindigul Corporation ,Dindigul ,Corporation ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் மாநகராட்சியில்...