×

பணம், தங்க காசு கொள்ளை

சேலம், ஏப். 3:சேலம் அழகாபுரத்தில் பூட்டியிருந்த ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனத்தில் பணம் மற்றும் தங்க காசை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சேலம் 5 ரோடு அடுத்த அமராவதி தெருவைச் சேர்ந்தவர் ஷோபா (45). இவர் அழகாபுரத்தில் ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த 30ம் தேதி இரவு தனது நிறுவனத்தை பூட்டிச் சென்ற இவர், மறுநாள் காலை வந்து பார்த்துள்ளார். அப்போது, நிறுவனத்தின் பணம் வைக்கும் அறை திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அதிலிருந்த ₹1.15 லட்சம் பணம் மற்றும் அரைப்பவுன் தங்க காசு மாயமாகியிருந்தது. இதனையடுத்து அங்கு வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்தார். இதில் 2 மர்மநபர்கள் நிறுவனத்திற்குள் புகுந்து பணம் மற்றும் தங்க காசை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அழகாபுரம் போலீசில் ஷோபா புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பணம், தங்க காசு கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Salem ,Alaghapuram, Salem ,Shobha ,Amaravati Street ,Salem 5 Road ,Alaghapuram ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...