×

பஸ் மீது லாரி மோதி விபத்து 4 பெண் போலீஸ் உள்பட 18 பேர் படுகாயம்

வடலூர், ஏப். 2: கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் பேருந்து ஒன்று 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று காலை 6 மணி அளவில் விருத்தாசலம் நோக்கி சென்றது. காலை 7 மணி அளவில் வடலூர் சத்தியஞானசபை அருகே பேருந்து வந்தது. அப்போது, எதிரே விருத்தாசலத்தில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கடலூர் நோக்கி வந்த லாரி, எதிர்பாராத விதமாக தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 வாகனங்களின் முன்புற கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறினர். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து, பேருந்தின் இடிபாட்டுக்குள் சிக்கி படுகாயம் அடைந்த டிரைவர் சரவணகுமார்(25), நடத்துனர் ராமராஜன்(30), விருத்தாசலம் ஜலாலுதீன் மகன் சாதிக்(42), சேத்தியாத்தோப்பு அகிலா(35), வடலூர் ராமலிங்கம் மகள் குகப்பிரியா(18) மற்றும் லாரி டிரைவர் மேட்டுக்குப்பம் பாஸ்கர் (56) உள்பட 14 பேரை மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும் இதில் படுகாயம் அடைந்த கடலூர் ஆயுதப்படை பெண் காவலர்கள் குள்ளஞ்சாவடி சுப்பிரமணியபுரம் புஷ்பராஜ் மனைவி ராகவி(48), கடலூர் ராஜதுரை மனைவி சகிராபானு(28), மகாலட்சுமி, கனகபிரியா ஆகிய 4 பேரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 18 பேரில், 4 பேர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு பொது மருத்துவமனையில் ேசர்க்கப்பட்டனர். இது குறித்து தகவலின் பேரில் வடலூர் போலீசார் பேருந்து டிரைவர் மற்றும் லாரி டிரைவர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் கடலூர்-விருத்தாசலம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post பஸ் மீது லாரி மோதி விபத்து 4 பெண் போலீஸ் உள்பட 18 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Vadalore ,Cuddalore bus station ,Vriddhachalam ,Vadalur Sathyagnanasabha ,Dinakaran ,
× RELATED குள்ளஞ்சாவடி அருகே நள்ளிரவில்...