×

அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது

தஞ்சாவூர், மார்ச்.31: கபிஸ்தலம் பகுதியில் அனுமதியின்றி மது விற்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் காவல் சரக பகுதிகளில் பாபநாசம் டிஎஸ்பி அசோக் மேற்பார்வையில், கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகதாஸ் மற்றும் போலீசார் காவல் சரக பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கபிஸ்தலம் அருகே உள்ள திருமண்டங்குடி அரசு மதுபான கடை அருகிலும், புது கண்டிப்படுகை மயானம் அருகிலும் நின்று கொண்டு எந்த வித அரசு அனுமதியும் இன்றி மது விற்பனை செய்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் திருப்புறம்பியம், ஆலமன் குறிச்சி சாலையை சேர்ந்த செல்வம் மகன் வினோத்குமார் (36), புதுக்கண்டிப்படுகை பிள்ளையார் கோவில் தெரு, சின்னத்துரை மகன் சக்கரவர்த்தி (53) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Kapistalam ,Thanjavur District ,Papanasam ,DSP Ashok ,Kapistalam Police ,Inspector ,Mahalakshmi ,Special ,Murugadoss ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்மோட்டாரை...