×

டூவீலர் மீது பஸ் மோதி வாலிபர் பலி

கிருஷ்ணகிரி, மார்ச் 31: தர்மபுரி மாவட்டம், ஏ.செக்காரப்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன்(34). இவர் கடந்த வியாழக்கிழமை இரவு, கிருஷ்ணகிரி – தர்மபுரி சாலையில் பையூர் என்ற இடத்தில் டூவீலரில் சென்ற போது, அவ்வழியாக வந்த அரசு பஸ், டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த பாண்டியனை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டூவீலர் மீது பஸ் மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Pandian ,A. Sekarapatti, Dharmapuri district ,Baiyur ,Krishnagiri-Dharmapuri road ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்