×

மெட்ரோ ரயில் கட்டுமான பணி காரணமாக ராஜிவ்காந்தி சாலையில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு

சென்னை: மெட்ரோ ரயில் கட்டுமான பணி காரணமாக ராஜிவ்காந்தி சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தினர் தனது கட்டுமான பணி, ராஜிவ்காந்தி சாலையில் உள்ள தரமணி மற்றும் கந்தன்சாவடி சாலையில் மேற்கொள்ள உள்ளதால், பின்வரும் சாலைகளில் நாளை முதல் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செயல்படுத்தப்படும்.

அடையாறு மற்றும் திருவான்மியூரில் இருந்து வரும் வாகனங்கள் வேளச்சேரி நோக்கி எஸ்ஆர்பி சந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, அவர்கள் ஒய்எம்சிஏ முன்பு புதிய “யு” திருப்பம் செய்து, எஸ்ஆர்பி சந்திப்பில் இடதுபுறமாக திரும்பி தாங்கள் செல்ல வேண்டிய இலக்கை அடையலாம். வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post மெட்ரோ ரயில் கட்டுமான பணி காரணமாக ராஜிவ்காந்தி சாலையில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Rajiv Gandhi Road ,CHENNAI ,Metro Rail ,Chennai Metro Rail Company ,Rajiv Gandhi ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம்: 3...