×

திருவாடானையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

திருவாடானை, மார்ச் 29: நாடாளுமன்றத் தேர்தலில் 100 % வாக்களிக்க வலியுறுத்தி திருவாடனையில் வாக்காளர் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. திருவாடானை தாசில்தார் கார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார். சிகே.மங்கலத்தில் இருந்து துவங்கிய பேரணி நகரின் முக்கிய பகுதிகளை கடந்து திருவாடானை தாலுகா அலுவலகம் வரை வந்து முடிவடைந்தது. இந்த பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மோட்டார் சைக்கிளில் கையில் பதாதைகளுடன் வந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

The post திருவாடானையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Voter awareness rally ,Thiruvadanai ,Tahsildar Karthikeyan ,Thiruvadan ,CK.Mangalam ,Voter Awareness Rally in Thiruvadan ,Dinakaran ,
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி