×

அதிக தூக்க மாத்திரை தின்ற ஐடி ஊழியர் பலி

தர்மபுரி, மார்ச் 29: திருச்சி பாரதி நகர் கீரின்ஸ் தெருவை சேர்ந்தவர் கிலிட்டிங் ஸ்டாலின் பாபு (36). இவர் ஜதராபாத்தில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் சற்று மனவிரக்தியில் இருந்தார். இந்நிலையில் கடந்த 18ம்தேதி கிலிட்டிங் ஸ்டாலின் பாபு ஜதராபாத்தில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரையை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் தர்மபுரியில் உள்ள அவரது உறவினர்கள், அவரை அழைத்து வந்து, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அதிக தூக்க மாத்திரை தின்ற ஐடி ஊழியர் பலி appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Kilting Stalin Babu ,Keerins Street, Bharati Nagar, Trichy ,Jadarabad ,Dinakaran ,
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி