×

கொல்கத்தா விமான நிலையத்தில் 2 விமானங்கள் உரசி விபத்து: இறக்கைகள் சேதம்

கொல்கத்தா: கொல்கத்தா விமான நிலையத்தில் நடந்த விபத்தில், இண்டிகோ விமானமும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அருகருகே வந்ததில் விமானங்களின் இறக்கைகளிலும் சேதம் ஏற்பட்டது. நேற்று காலை 11 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு புறப்படத் தயாரானது. அதே சமயத்தில் இண்டிகோ விமானம் தர்பங்காவுக்குச் புறப்பட்டது. ஓடு பாதைக்கு அருகில் உள்ள டாக்ஸிவேயில் 2 விமானங்களும் அருகருகே வந்தன. அப்போது 2 விமானங்களின் இறக்கைகளும் உரசியதில் சேதம் ஏற்பட்டது. இதில் பயணிகளுக்கோ, பணியாளர்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. விபத்தை ஏற்படுத்திய இண்டிகோ விமானி, துணை விமானியின் பெயர்களை விமானிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கொல்கத்தா விமான நிலையத்தில் 2 விமானங்கள் உரசி விபத்து: இறக்கைகள் சேதம் appeared first on Dinakaran.

Tags : Kolkata airport ,KOLKATA ,Chennai ,Dinakaran ,
× RELATED வெடிகுண்டு மிரட்டலை அடுத்து சென்னை...