×

ராமநாதபுரத்தில் 5 ஒபிஎஸ் போட்டி – எடப்பாடி தரப்பு மீது புகார்

சென்னை : ஓபிஎஸ் என்ற பெயரில் 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்தது தொடர்பாக எடப்பாடி தரப்பு மீது ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் குற்றம் சாட்டியுள்ளார். ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “சூழ்ச்சிகார எடப்பாடி கும்பலின் அல்லக்கைகள் ஒரு சிலர், ஓ.பன்னீர்செல்வம் பெயரில் 5 நபர்களை தமிழ்நாடு முழுவதும் இருந்து வரவழைத்து களத்தில் இறங்கியுள்ளது. அந்த அப்பாவிகளை கொண்டு வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். எங்களது ராமநாதபுரம் மக்களை எந்த அளவுக்கு நீங்கள் நினைத்திருக்கிறீர்கள்? அவர்களை என்ன முட்டாளாக நினைக்கிறீர்களா?”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post ராமநாதபுரத்தில் 5 ஒபிஎஸ் போட்டி – எடப்பாடி தரப்பு மீது புகார் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Edappadi ,Chennai ,Jayapradeep ,O. Panneer Selvath ,Dinakaran ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்