×

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடதமிழக உள் மாவட்டங்களில் வெப்ப நிலை 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. தமிழக உள்மாவட்டங்களில் அதிகபட்ச வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும். தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் 42 டிகிரி செல்சியஸ் வரை வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

The post தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் வானிலை மையம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,North Tamilnadu ,CHENNAI ,North Tamil Nadu ,Meteorological Department ,Meteorological Center ,
× RELATED வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 2...