×

கொடநாடு வழக்கை சிபிஐ கையிலெடுக்கும்: எடப்பாடிக்கு பாஜ மிரட்டல்

மன்னார்குடி: தஞ்சை மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில செயலாளர் கருப்பு முருகானந்தம் போட்டியிடுகிறார். இந்நிலையில், கூட்டணி கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் அமமுக மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் தலைமையில் மன்னார்குடியில் நடந்தது.

இதில் வேட்பாளர் கருப்பு முருகானந்தம் பேசியது: அதிமுக பல அணிகளாக பிரிந்து செயல்படுவதை விரும்பாத பாஜக தேசிய தலைமை, அனைவரையும் ஒன்று சேர்க்க கடந்த சட்டமன்ற தேர்தல் முதல் தற்போது வரை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், அனைவரும் ஒற்றுமையாக செயல்பட எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை. இதனால் தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் அவரால் ஆட்சி அமைக்க முடியவில்லை.

தற்போது கூட அவர் எங்களோடு கூட்டணி சேர்வதை தவிர்த்து தேர்தலை சந்திக்கிறார். வரும் மக்களவை தேர்தலில் பாஜக மகத்தான வெற்றி பெற்று நரேந்திர மோடி மூன்றாம் முறையாக பிரதமராக பதவி ஏற்பார். அதன் பின்னர், கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு சிபிஐ வசம் மாற்றப்பட்டு உண்மை குற்றவாளிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

The post கொடநாடு வழக்கை சிபிஐ கையிலெடுக்கும்: எடப்பாடிக்கு பாஜ மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : CBI ,BJP ,Mannargudi ,Party ,Karupu Muruganandam ,Tanjore Lok Sabha ,AAMUK District ,S. Kamaraj ,Karupu Murukananda ,Kodanad ,Edappadi ,Dinakaran ,
× RELATED சந்தேஷ்காலியில் வெடிபொருள்...