×

காரில் ஆண் சடலம் திருமங்கலத்தில் பரபரப்பு

 

திருமங்கலம், மார்ச் 26: சேடபட்டி அருகேயுள்ள காளப்பன்பட்டியை சேர்ந்தவர் சுகு மாறன் (43) திருமங்கலம் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். சொந்தமாக கார் வைத்துள்ள சுகுமாறன் தனது காரை 15 நாட்களுக்கு முன்பு திருமங்கலம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்ட காரில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் செங்குளம் விஏஓ குருசாமிக்கு தகவல் கொடுத்தனர். அவர் கொடுத்த தகவலின்படி திருமங்கலம் டவுண் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காரை திறந்து பார்த்த போது உள்ளே 58 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருந்தது. பின்னர் ேபாலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடல் அழுகிய நிலையில் காணப்பட்டதால் இவர் உயிரிழந்து 3 நாட்கள் இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கார் உரிமையாளரான அரசு பஸ் டிரைவர் சுகுமாறனிடம் கேட்ட போது இறந்து கிடந்தது யார் என தெரியாது என்றும், காரின் பின்பக்க கதவை திறந்து உள்ளே சென்றிருக்கலாம் என்றும் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

The post காரில் ஆண் சடலம் திருமங்கலத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Thirumangalam ,Tirumangalam ,Suku Maran ,Kalapanpatti ,Sedapatti ,Tirumangalam Government Transport Corporation ,Sukumaran ,Tirumangalam government ,
× RELATED தண்ணீர் தொட்டியில் விழுந்த மயில் மீட்பு