×

வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை போலீஸ்காரர் கைது

திருமலை: வரதட்சணை கேட்டு மனைவியை அடித்து உதைத்து சித்ரவதை செய்த போலீஸ்காரரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் வசிப்பவர் பவானிசங்கர். அனகப்பள்ளி நகர காவல் நிலையத்தில் காவலராக உள்ளார். இவரது மனைவி மகாலட்சுமி. திருமணமான சில நாட்களுக்கு பிறகு பவானிசங்கர் கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமை செய்து வந்துள்ளார். இதனால் மகாலட்சுமி மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தலுக்கு ஆளானார். மேலும் மனைவி மீது சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த மகாலட்சுமி கடந்த 17ம்தேதி தனது தாய் வீட்டுக்கு சென்றார்.

அன்று மாலை பவானிசங்கர் தனது மாமியார் வீட்டிற்கு வந்தார். அப்போது மனைவியுடன் தகராறு ஏற்பட்டு தாக்கியுள்ளார். மேலும் மகாலட்சுமியின் தலைமுடியை வெட்டி, புருவங்களையும் மழித்துள்ளார். இதுகுறித்து மகாலட்சுமி, போலீசில் தனது கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் மீது வரதட்சணை கேட்டு அடித்து கொடுமைபடுத்தியதாக புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து போலீஸ்காரர் பவானிசங்கரை நேற்று கைது செய்தனர். மேலும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை போலீஸ்காரர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Bhavanishankar ,Visakhapatnam, Andhra Pradesh ,Anakapally City Police Station ,Mahalakshmi ,
× RELATED கண்ணமங்கலம் அருகே தம்டகோடி மலையில் தீ