×

கார் மீது லாரி மோதல் சென்னை பெண் இன்ஜினியர் பலி: நண்பரின் திருமணத்துக்கு சென்றபோது சோகம்

 

சென்னை, மார்ச் 24: கார் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த பெண் சாப்ட்வேர் இன்ஜினியர் உயிரிழந்தார். சென்னை திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். இவரது மகள் ஜெஸ்சி(24). இவர் சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார். இவரும், இவரது நண்பர்களான கமலேஷ், கமல், ரூபிணி ஆகியோரும் திருப்பூரில் நடைபெறும் நண்பரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று சென்னையில் இருந்து காரில் திருப்பூருக்கு புறப்பட்டனர்.

சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த பிரிதிவிமங்கலம் பகுதியில் நேற்று அதிகாலை 5 மணியளவில் வந்தபோது எதிரே வந்த சரக்கு லாரி, கார் மீது மோதியது. இதில், ஜெஸ்சிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், காயமடைந்த கமல், ரூபிணி மற்றும் கமலேஷ் ஆகிய மூன்று பேரும் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசர் ஜெஸ்சியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து சரக்கு லாரி ஓட்டுநர் ஈரோடு வெங்கடேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கார் மீது லாரி மோதல் சென்னை பெண் இன்ஜினியர் பலி: நண்பரின் திருமணத்துக்கு சென்றபோது சோகம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Joseph ,Tirumullaivayal ,Jessie ,
× RELATED பெண்களை ஆபாசமாக பேசிய தகராறில் 12 பேரை...