×

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட வியாபாரி கைது: 13 பைக்குகள் பறிமுதல்

 

தாம்பரம், மார்ச் 24: சென்னை உள்ளகரம், பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் கவிதா(39). இவர் கடந்த, 10ம் தேதி, இரவு 7 மணியளவில் வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையம் அருகில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மயிலாப்பூர் கோயிலுக்கு சென்றார். பின்னர், 2 மணிநேரம் கழித்து வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் மாயமானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து, வேளச்சேரி காவல்நிலையத்தில் கவிதா புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். மேலும், ரயில் நிலையம் அருகே இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை சோதனை செய்தனர். அதில், இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்த வேளச்சேரி விஜயநகர் முதல் மெயின் ரோட்டைச் சேர்ந்த வியாபாரி இளங்கோ (63) என தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து இளங்கோவை நேற்று கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 13 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். பின்னர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட வியாபாரி கைது: 13 பைக்குகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Kavitha ,Bharathidasan Street, Unagaram, Chennai ,Velachery ,Mylapore ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...