×

பஸ் மீது கல் வீசியதில் டிரைவர் மண்டை உடைந்தது

 

விழுப்புரம், மார்ச் 23: தனியார் பேருந்து மீது கல்வீசி தாக்கியதில் டிரைவரின் மண்டை உடைந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. காவணிப்பாக்கத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் ஓட்டி வந்தார். நடத்துனராக பில்லூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் இருந்தார்.

பேருந்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்த நிலையில் மல்ராஜன்குப்பம் என்ற இடத்தில் வந்தபோது திடீரென அடையாளம் தெரியாத நபர் கல்வீசி தாக்கியதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. மேலும் டிரைவர் பன்னீர்செல்வம் மண்டை உடைந்த நிலையில் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து நடத்துனர் அளித்த புகாரின்பேரில் வளவனூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பஸ் மீது கல் வீசியதில் டிரைவர் மண்டை உடைந்தது appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Puducherry ,Panneerselvam ,Kavanipakkam ,
× RELATED 2.5 கிலோ நகை அணிந்து வந்த கர்நாடக...