×

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக உள்பட மும்முனைப்போட்டி

 

ஈரோடு, மார்ச் 23: ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக, பாஜ ஆகிய கூட்டணிகளிடையே மும்முனை போட்டி நிலவுகின்றது. ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் கடந்த முறை மதிமுக போட்டியிட்ட நிலையில் இந்த முறை திமுகவே நேரடியாக களம் காணுகின்றது. இதையடுத்து திமுக கூட்டணி சார்பில் வேட்பாளராக கே.இ.பிரகாஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் வேட்பாளராக ஆற்றல் அசோக்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாஜ கூட்டணியில் தமாகா வேட்பாளராக விஜயகுமார் போட்டியிட உள்ளார். 3 கூட்டணிகள் களத்தில் இருந்தாலும் திமுக, அதிமுக ஆகிய அணிகளுக்குதான் நேரடி போட்டி நிலவ உள்ளது. இதேபோல நாம் தமிழர் கட்சியானது இம்முறையும் தனித்து போட்டியிட உள்ளது. இக்கட்சியின் வேட்பாளராக கார்மேகன் போட்டியிட உள்ளார். இதுவரை சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், திங்கட்கிழமைக்கு மேல் திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

The post ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக உள்பட மும்முனைப்போட்டி appeared first on Dinakaran.

Tags : DMK ,AIADMK ,Erode ,BJP ,
× RELATED பொய் மட்டுமே பேசி வரும் மோடியை...