×

படகில் சென்று மீன் பிடித்தபோது ஆழ்கடலில் தவறி விழுந்த மீனவர் சடலமாக மீட்பு

திருவொற்றியூர்: படகில் சென்று ஆழ்கடலில் மீன் பிடித்தபோது தவறி விழுந்த மீனவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தண்டையார்பேட்டை, பல்லவன் நகரை சேர்ந்தவர் மைக்கேல் ராஜ் (40), மீனவரான இவர், கடந்த 14ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த நாகூர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றார். ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென கடலுக்குள் தவறி விழுந்து அவர் காணாமல் போனார்.

சக மீனவர்கள் அவரை நீண்ட நேரம் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், எண்ணூர், நெட்டுக்குப்பம் முகத்துவார பகுதியில் மைக்கேல்ராஜ் சடலம் நேற்று கரை ஒதுங்கியது. தகவலறிந்த எண்ணூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, மைக்கேல்ராஜ் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post படகில் சென்று மீன் பிடித்தபோது ஆழ்கடலில் தவறி விழுந்த மீனவர் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Michael Raj ,Dandiyarpetta ,Pallavan Nagar ,Nagore ,
× RELATED பறக்கும் படை சோதனையில் ரூ.6 லட்சம் பறிமுதல்