×

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 32 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

 

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. இருவேறு சம்பவங்களில் 32 தமிழக மீனவர்களுடன் 5 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. நெடுந்தீவு அருகே மீன் பிடித்தபோது 25 தமிழக மீனவர்கள், 3 படகுகளை இலங்கை வீரர்கள் சிறைபிடித்தனர். மற்றொரு சம்பவத்தில் மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்த 7 மீனவர்கள் கைது; 2 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான 32 தமிழக மீனவர்களும் மன்னார், யாழ்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளனர்.

ஒன்றிய அரசு உடனடியாக தலையிட்டு இலங்கை கடற்படை பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தவேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கடந்த 10ம் தேதி புதுக்கோட்டையை சேர்ந்த 7 மீனவர்களும், கடந்த 15ம் தேதி காரைக்காலை சேர்ந்த 15 மீனவர்களையும், ராமேஸ்வரத்தை சேர்ந்த 21 மீனவர்களும், இன்று 32 மீனவர்களும் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். இந்த ஒரே மாத்தத்தில் 75 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் தமிழக மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 32 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை appeared first on Dinakaran.

Tags : Sri Lanka Navy ,RAMESWARAM ,Nugas ,Nedundivu ,
× RELATED இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் மீனவர்கள் மீது கொடூர தாக்குதல்