×

திருத்துறைப்பூண்டி பெரிய கோயில் சித்திரை திருவிழா பந்தக்கால் முகூர்த்தம்

 

திருத்துறைப்பூண்டி, மார்ச் 21: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவில் சித்திரை பெருந்திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு பிடாரி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது நேற்று காலை பந்தக்கால் முகூர்த்த விழா நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில் சித்திரை பெருந்திருவிழா வரும் ஏப்ரல் 4 – ந்தேதி அனுக்ஞை விக்னேஸ்வர பூஜைகள் நடைபெறும் 6ம்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. முக்கிய திருவிழாவான தேரோட்டம் வரும் 21ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடு பாடுகளை கோயில் செயல் அலுவலர் முருகையன் , தக்கார் மணவழகன் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

 

The post திருத்துறைப்பூண்டி பெரிய கோயில் சித்திரை திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் appeared first on Dinakaran.

Tags : Thirutharapoondi Big Temple Painting Festival Pandakal Mugurthaam ,Thiruthaurapoondi ,Thiruthaurapoondi, ,Thiruvarur district ,Chitrai Perundruvizha ,Chitrai temple ,Pitari Amman ,Thiruthurapoondi ,Thiruthurapoondi Big Temple Painting Festival Bandhakal Mukurtam ,
× RELATED ஒரு கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது