×

முத்துப்பேட்டையில் 100% வாக்குப்பதிவு வலியுறுத்தி பொதுமக்களிடம் வருவாய் துறையினர் விழிப்புணர்வு

 

முத்துப்பேட்டை,மார்ச்21: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய் துறை சார்பில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு முத்துப்பேட்டை வட்டாட்சியர் குணசீலி தலைமை வகித்தார். இதில் மண்டல துணை வட்டாட்சியர் மைதிலி, தேர்தல் துணை வட்டாட்சியர் கிருஷ்ணகுமார், வருவாய் ஆய்வாளர் வினோத் குமார் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் முத்துப்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து புறப்பட்டு வீதி வீதியாக சென்று பின்னர் கடை தெரு மற்றும் பழைய பேருந்து நிலையம், மன்னார்குடி சாலை குமரன் பஜார் பட்டுக்கோட்டை சாலை திருத்துறைப்பட்டி சாலை உட்பட முக்கிய சாலைகளில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மற்றும் குடும்பத் தலைவிகளை சந்தித்து வரும் தேர்தலில் அனைவரும் தவறாமல் ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வகையில் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களும் பொதுமக்கள் வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டது.

The post முத்துப்பேட்டையில் 100% வாக்குப்பதிவு வலியுறுத்தி பொதுமக்களிடம் வருவாய் துறையினர் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Revenue department ,Muthuppet ,Thiruvarur ,Dinakaran ,
× RELATED வாக்கு சாவடிக்குள் புகுந்து வாக்காளர்களை விரட்டிய குடிமகனால் பரபரப்பு