×

ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் திமுக போட்டி: தேர்தல் பணிமனை அமைக்கும் பணி தீவிரம்

 

ஈரோடு, மார்ச் 21: ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் திமுக போட்டியிடுவதை தொடர்ந்து, தேர்தல் பணிமனை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் திமுக இளைஞர் அணி மாநில துணை செயலாளர் பிரகாஷ் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக நேற்று அதிகாரப்பூர்வமாக திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதையொட்டி, தேர்தல் களப்பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள ஈரோடு பெருந்துறை சாலையில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் தேர்தல் பணிமனை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஓரிரு நாளில் இப்பணிகள் நிறைவடைந்து, திமுக மற்றும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் உள்ள தோழமை கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து தேர்தல் களப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

The post ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் திமுக போட்டி: தேர்தல் பணிமனை அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : DMK Contest ,Erode Parliamentary Elections ,Erode ,DMK ,State Deputy Secretary ,Prakash Udayasuriyan ,DMK Contest in ,Dinakaran ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...