×

அழகர்கோவிலில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி கோயில் ஊழியர்கள் பங்கேற்பு

அழகர்கோவில், மார்ச் 21: அழகர்கோயில் அலுவலர்கள், பணியாளர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மேலூர் தீயணைப்பு நிலைய அதிகாரி மணிவண்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், திருக்கோயில் பணியாளர்கள், மற்றும் உபகோயில் பணியாளர்களுக்கு தீத்தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் அளித்தனர். பின்னர், அவர்களுக்கு நேரடியாக தீத்தடுப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், தீப்பற்றும் அபாயம் உள்ள இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோயில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்த விளக்கம் மற்றும் ஒத்திகை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் கலைவாணன், கண்காணிப்பாளர்கள் பிரதீபா, அருள்செல்வன் ஆகியோர் செய்திருந்தனர்.

The post அழகர்கோவிலில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி கோயில் ஊழியர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Beauregard ,Malur Fire Station ,Officer ,Manivanan ,Beauty Cave ,
× RELATED உடல் உஷ்ணம் அதிகரித்து மூளை...