×

கோயிலில் வசித்த ஆதரவற்றவர் மீட்பு

தேன்கனிக்கோட்டை, மார்ச் 21: தேன்கனிக்கோட்டை அருகே ரத்தனகிரி பஞ்சாயத்து தடிகல் கிராமத்தில், நீண்ட நாட்களாக சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர், குடும்பத்தினர் கைவிட்ட நிலையில், நடக்க முடியாமல் கோயிலில் தங்கி இருந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில், கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் தலைமையில் மருத்துவ குழுவினர், ஊராட்சி செயலாளர் பவுன்ராஜ், மூர்த்தி ஆகியோர், அந்த நபருக்கு சிகை திருத்தம் செய்து, குளிப்பாட்டி புத்தாடை அணிவித்து, தடிகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தற்போது அவர் நலமாக உள்ளதால், சமூக நலத்துறையின் மூலம், அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கோயிலில் வசித்த ஆதரவற்றவர் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Rattanagiri Panchayat Thadigal ,Dinakaran ,
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு