×

திருமங்கலம் வாக்குசாவடி மையத்தில் கலெக்டர் ஆய்வு

 

திருமங்கலம், மார்ச் 20: நாடாளுமன்ற தேர்தலில் திருமங்கலத்தில் வாக்குபதிவு நடைபெறும் பள்ளிகள் மற்றும், மின்னணு வாக்கு இயந்திரம் வைக்கப்படும் திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் நேற்று ஆய்வு நடத்தினார். ஏப்.19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் தொகுதிகள் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் கீழ் அமைந்துள்ளன.

இதன் காரணமாக இந்த இரண்டு தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை விருதுநகரில் நடைபெறும். இதனையொட்டி விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேற்று நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் திருமங்கலத்தில் குறித்து ஆய்வு நடத்தினார். மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் திருமங்கலம் தாலுகா அலுவலகம் மற்றும் வாக்குபதிவு நடைபெறும் மையங்களில் ஒன்றான திருமங்கலம் பிகேஎன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு நடத்தினார்.

வாக்குசாவடி மையங்களில் கட்டமைப்பு வசதிகள், தேவையானபாதுகாப்பு அம்சங்கள், போக்குவரத்து வசதிகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்டவகைள் குறித்து நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். அப்போது திருமங்கலம் உதவி தேர்தல் நடத்து அலுவலர் மற்றும் ஆர்டிஓ சாந்தி, தாசில்தார் மனேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

The post திருமங்கலம் வாக்குசாவடி மையத்தில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Thirumangalam Vakusawadi Centre ,Thirumangalam ,Virudhunagar ,Collector ,Jayaseelan ,Taluga ,Tirumangalam ,Tirumangala ,
× RELATED மதுரை திருமங்கலம் அருகே விபத்தில் 4 பேர் பலி