×

பழநி நகரில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்றால் நடவடிக்கை: நகராட்சி எச்சரிக்கை

 

பழநி, மார்ச் 20: பழநி நகரில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தால் பறிமுதல், அபராதம் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பழநி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று பங்குனி உத்திரம். இத்திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது.

இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் மார்ச் 23ம் தேதியும், தேரோட்டம் மார்ச் 24ம் தேதியும் நடைபெறவுள்ளது. எனினும் தற்போதே பக்தர்களின் வருகை துவங்கி விட்டது. இந்நிலையில் பக்தர்களின் நலன் கருதி பழநி நகரில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இதன் காரணமாக நகரில் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த வேண்டாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்களை சுகாதார ஆய்வாளர்கள் மூலம் சோதனை செய்து பறிமுதல் மற்றம் அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென நகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

The post பழநி நகரில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்றால் நடவடிக்கை: நகராட்சி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Palani Nagar ,Palani ,Palani Temple ,Panguni Uthiram ,
× RELATED பழநி நகரில் பிளாஸ்டிக் பொருட்கள்...