×

2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

தர்மபுரி, மார்ச் 20: தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் கோபி மனைவி புவனேஸ்வரி (30). இவர்களுக்கு தட்சிதா (9) என்ற மகளும், லோகித் (7) என்ற மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் காலை புவனேஸ்வரி தனது 2 குழந்தைகளையும் பள்ளிக்கு அழைத்து சென்றார். வெகுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பவில்லை. இதையடுத்து அவர்களை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பொம்மிடி போலீசில் புகார் மாமியார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காணாமல் போன தாய் மற்றும் 2 குழந்தைகளை தேடிவருகின்றனர்.

The post 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Gopi ,Bhuvaneshwari ,Nathamedu ,Bommidi ,Dharmapuri district ,Takshitha ,Lokit ,Bhubaneswari ,
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி