×

விராலிமலை ஊராட்சிக்கு இறந்தவர்களின் உடலை பாதுகாக்கும் குளிர்சாதன பெட்டி இலவசமாக வழங்கல்

 

விராலிமலை,மார்ச்19: விராலிமலை ஊராட்சிக்கு தனியார் அறக்கட்டளை சார்பில் இறந்தவர்களின் உடலை பாதுகாக்கும் குளிர் சாதனப் பெட்டி இலவசமாக வழங்கப்பட்டது. விராலிமலையில் கடந்த 2000ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் தனியார் அறக்கட்டளை பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறது. அந்த வகையில் அப்பகுதிகளில் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை, மேல்நிலைப்பள்ளிகளில் பயின்று உயர்கல்வியை தொடர நினைக்கும் மாணவர்களுக்கு புரவலர்கள் மூலம் உதவிதொகை, மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்த வருடத்தில் 10 நாட்கள் புத்தக கண்காட்சி, இலக்கிய மன்றம் சார்பில் 10 நாட்கள் இலக்கிய சொற்பொழிவு அதனுடன் இணைந்து, மாணவர்களின் பேச்சாற்றலை வலிமைபடுத்த பேச்சு போட்டி,பாரம்பரிய இசையை மீட்கும் வகையில் அரசு இசைப்பள்ளி ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு இசைப்பயிற்சி என பல்வேறு சமூக பணிகள் ஆற்றி வருகிறது. இதன் தொடர்ச்சியாக ரூ.50 ஆயிரம் மதிப்பிலான உயிரிழந்தவர்களின் உடலை பாதுகாப்பாக வைக்கும் குளிர்சாதனப் பெட்டி விராலிமலை ஊராட்சிக்கு நேற்று இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஊராட்சி தலைவர் ரவி, துணைத் தலைவர் தீபன் சக்கரவர்த்தி, அறக்கட்டளை தலைவர் பூபாலன், நிர்வாகிகள் மாரியப்பன், ராஜேந்திரன், பேப்பர் பிரபு, மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post விராலிமலை ஊராட்சிக்கு இறந்தவர்களின் உடலை பாதுகாக்கும் குளிர்சாதன பெட்டி இலவசமாக வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Viralimalai ,
× RELATED விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் பூச்சொரிதல் விழா