×

வீடுகளில் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை, அதிரடி சோதனை

 

பெரம்பலூர்,மார்ச்17: பெரம்பலூர் நகரில் குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் வீடுகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி-அதிரடி சோதனையில் பெரம்பலூர் மாவட்ட தனிப் படைபோலீசார் ஈடுபட்டனர். இதில் 4பேர் கைது செய்தனர். திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் உத்தரவின்படி, திருச்சி சரக டிஐஜி மனோகர் வழி காட்டுதலின்படி, பெரம்ப லூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளாதேவி மேற்பார் வையில், பெரம்பலூர் மாவட்ட ஏடிஏஸ்பி (தலை மையிடம்) மதியழகன் தலைமையில் 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றசெயல்களில்ஈடுபடும் வழக்கமான குற்றவாளி கள், ரவுடிகள், சந்தேக நபர் கள் ஆகியோரின் வீடுக ளுக்கே நேரில் சென்று, அதிரடியாக சோதனை நடத்தினர். மேலும் அவர்க ளின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித் தும் அவர்களின் செயல் பாடுகளில் சந்தேகம் ஏதே னும் உள்ளவாறு நடந்து கொண்டுள்ளார்களா என்ப தையும் சோதனைகள் செய் தனர்.

 

The post வீடுகளில் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை, அதிரடி சோதனை appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Trichy Central Zone ,IG ,Karthikeyan ,Trichy Sarga ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி